கீழே குறிப்பிட்டுள்ள குறள்களைச் சொல்லும் போது நம் உதடுகள் ஒட்டாது..
1)
இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை (310)
எல்லையற்ற சினம் கொள்வார் இறந்தவர்க்கு ஒப்பாவார்.சினத்தை அறவெ துறந்தவர் துறவிக்கு ஒப்பாவார்.
2)
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் (341)
ஒருவன் பல வகையான பற்றுகளில் எந்த ஒன்றை விட்டு விட்டாலும் குறிப்பிட்ட அந்தப் பற்ரு காரணமாக வரும் துன்பம் அவனை அணுகுவதில்லை
3)
எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல் (489)
கிடைப்பதற்கு அரிய காலம் வாய்க்கும் போது அதைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செயற்கரிய செய்து முடிக்க வேண்டும்
4)
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து (1082)
அவள் வீசிடும் விழிவேலுக்கு எதிராக நான் அவளை நோக்க, அக்கணமே அவள் என்னைத் திரும்ப நோக்கியது, தானொருத்தி மட்டும் தாக்குவது போதாதென்று ஒரு தானையுடன் வந்து என்னைத் தாக்குவது போன்று இருந்தது
5)
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு (1296)
காதல் பிரிவைத் தனியே இருந்து நினைத்த போது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது.
1)
இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை (310)
எல்லையற்ற சினம் கொள்வார் இறந்தவர்க்கு ஒப்பாவார்.சினத்தை அறவெ துறந்தவர் துறவிக்கு ஒப்பாவார்.
2)
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் (341)
ஒருவன் பல வகையான பற்றுகளில் எந்த ஒன்றை விட்டு விட்டாலும் குறிப்பிட்ட அந்தப் பற்ரு காரணமாக வரும் துன்பம் அவனை அணுகுவதில்லை
3)
எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல் (489)
கிடைப்பதற்கு அரிய காலம் வாய்க்கும் போது அதைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செயற்கரிய செய்து முடிக்க வேண்டும்
4)
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து (1082)
அவள் வீசிடும் விழிவேலுக்கு எதிராக நான் அவளை நோக்க, அக்கணமே அவள் என்னைத் திரும்ப நோக்கியது, தானொருத்தி மட்டும் தாக்குவது போதாதென்று ஒரு தானையுடன் வந்து என்னைத் தாக்குவது போன்று இருந்தது
5)
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு (1296)
காதல் பிரிவைத் தனியே இருந்து நினைத்த போது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது.
No comments:
Post a Comment