Friday, September 6, 2019

வள்ளுவரின் சொல்விளையாட்டு - 40

அறிவுப் பஞ்சம்தான் மிகக் கொடுமையான பஞ்சமாகும்.மற்ற பஞ்சங்களைக் கூட உலகம் அவ்வளவாகப் பொருட்படுத்தாது

என்று புல்லறிவாண்மையில் சொல்லுபவர் மேலும் சொல்கிறார்..

ஒருவன் தன்னைத்தானே அறிவுடையவனாக மதித்துக் கொள்ளும் ஆணவத்திற்குப் பெயர்தான் அறியாமை எனப்படும்

இந்த அதிகாரத்திலும் அவர் தன் சொல் விளையாட்டினைக் காட்ட மறக்கவில்லை

காணாதான் காட்டுவான் தான்காணாண் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு (849)

அறிவற்ற ஒருவன், தான் அறிந்ததை மட்டும் வைத்துக் கொண்டு, தன்னை அறிவுடையவனாகக் காட்டிக் கொள்வான்.அவனை உண்மையிலேயே அறுவுடையவனாக்க முயற்சி செய்பவன் தன்னையே அறிவற்ற நிலைக்கு ஆளாக்கிக் கொள்வான்.

காணாதான், காட்டுவான்,காணான், காணாதான்.கண்டானாம்,கண்டவாறு

No comments: