கண்ணோட்டம் எனும் அதிகாரத்திலிருந்து சில குறள்கள்..
அன்புடன் அரவணைத்து இரக்கம் காட்டும் கண்ணோட்டம் எனப்படும் உலகியலுக்கு, மாறாக் இருப்பவர்கள் இந்தப் பூமிக்கு சுமையாவார்கள்
பண்ணென்னாம் பாடற் கியைபின்றேற் கண்ணென்னாங்
கண்ணோட்டம் இல்லாத கண் (573)
இரக்க உணர்வு, அன்பு எனும் கண்ணோட்டத்துடன் பொருந்தி வராத கண்ணும், பாடலுடன் பொருந்தி வராத இசையும் பயன் தராதவையாகும்
பண்ணென்னாம்,கண்ணென்னாங், கண்ணோட்டம் , கண் என விளையாடியவர் அடுத்தும் ஒரு சொல்விளையாட்டை நிகழ்த்துகிறார்.
கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல் (577)
கண்ணோட்டம், கண்ணிலர்,கண்ணுடையார், கண்ணோட்டம்...
கருணை மனம் கொண்டவர்க்கு இருப்பதே கண்கள் எனப்படும்.கருணையற்றோர் கண்ணற்றோர் என்றே கருதப்படுவார்கள்
அன்புடன் அரவணைத்து இரக்கம் காட்டும் கண்ணோட்டம் எனப்படும் உலகியலுக்கு, மாறாக் இருப்பவர்கள் இந்தப் பூமிக்கு சுமையாவார்கள்
பண்ணென்னாம் பாடற் கியைபின்றேற் கண்ணென்னாங்
கண்ணோட்டம் இல்லாத கண் (573)
இரக்க உணர்வு, அன்பு எனும் கண்ணோட்டத்துடன் பொருந்தி வராத கண்ணும், பாடலுடன் பொருந்தி வராத இசையும் பயன் தராதவையாகும்
பண்ணென்னாம்,கண்ணென்னாங், கண்ணோட்டம் , கண் என விளையாடியவர் அடுத்தும் ஒரு சொல்விளையாட்டை நிகழ்த்துகிறார்.
கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல் (577)
கண்ணோட்டம், கண்ணிலர்,கண்ணுடையார், கண்ணோட்டம்...
கருணை மனம் கொண்டவர்க்கு இருப்பதே கண்கள் எனப்படும்.கருணையற்றோர் கண்ணற்றோர் என்றே கருதப்படுவார்கள்
No comments:
Post a Comment