Wednesday, September 11, 2019

வள்ளுவத்தில் கடவுள் - 56

வள்ளுவர் தன் குறள்களில் எந்த ஒன்றிலும் தமிழ் என்றோ கடவுள் என்றோ சொல்லவில்லை.

ஆகவேதான் திருக்குறள்.."உலகப் பொதுமறை" என போற்றப்படுகின்றது.

முதல் அதிகாரம் கடவுள்வாழ்த்து என்றாலும் அதில் வரும் ஆதி பகவன் இறைவனையேக் குறிப்பன ஆகும்

தவிர்த்து "கடவுள்" என்ற சொல்லைச் சொல்லவில்லையேத் தவிர கீழ்கண்ட குறள்களில் தெய்வம், இறைவன் என்ற சொற்களை சொல்லியுள்ளார்

1)

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு (5)

இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்

2)

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும் (50)

தெய்வத்திற்கென எத்தனையோ அருங்குணங்கள் சொல்லப்படுகின்றன.உலகில் அறநெறியில் நின்று வாழ்கிறவன் தெய்வத்திற்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான்

3)

தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை (55)

கணவன் வாக்கினைத் தெய்வத்தின வாக்கினைவிட மேலாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணயிட்டவுடன் மழை நடுங்கிப் பெய்யுமாம்

4)
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் (619)

தெய்வமே எண்ரு அழைத்து நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும் போது அந்த உழைப்பிற்கேற்ற வெற்றியினைத் தரும்

5)
ஐயப் படாஅ தகத்த துணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்
(702)

ஒருவன் மனத்தில் உள்ளதைத், தெளிவாக உணர்ந்து கொள்ளக்கூடிய சக்தி தெய்வத்திற்கே உண்டு என்று கூறினால், அத்திறமையை உடைய மனிதனையும் அத்தெய்வத்துடன் ஒப்பிடலாம்.

No comments: