Sunday, September 8, 2019

வள்ளுவரும் சொல்விளையாட்டும் - 45

பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த  உலகம் ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது.எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது.

உழவு என்றே உழவுத் தொழிலுக்கு ஒரு தனி அதைகாரததை எழுதியுள்ள வள்ளுவரின் கூற்று இது.

பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர் (1034)

பல அரசுகளின் நிழல்களைத் தமது குடைநிழலின் கீழ் கொண்டு வரும் வலிமை பெற்றவர்கள் உழவர்கள்..என இக்குறளில் உழவு செய்பவரைப் புகழ்கிறார்.

பலகுடை,தங்குடை,அலகுடை
நீழல், நீழலவர்

வள்ளுவரின் குறும்பினை இக்குறளில் பாருங்கள்..

செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்
தில்லாளின் ஊடி விடும் (1039)

உழவன், தனது நிலத்தை நாள்தோறும் சென்று கவனிக்காமல் இருந்தால், அவனால் வெறுப்புற்று விலகி இருக்கும் மனைவிபோல அது விளைச்சலின்றிப் போய்விடும்..

No comments: