Thursday, September 5, 2019

வள்ளுவரின் சொல்விளையாட்டு - 34


ஆறு கடல் எனும் இருபுனலும், வளர்ந்தோங்கி நீண்டமைந்த மலைத் தொடரும் வருபுனலாம் மழையும்,வலிமைமிகு அரணும் ஒரு நாட்டின் சிறந்த உறுப்புகளாகும்

நல்ல  அரசு அமையாத நாட்டில் எல்லாவித வளங்களும் இருந்தாலும் எந்தப் பயனும் இல்லாமற் போகும்

நாடு அதிகாரத்தில் மேலும் சொல்கிறார்..

நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு (739)

இடைவிடாமல் முயற்சி மேற்கொண்டு வளம் பெறும் நாடுகளைவிட இயற்கையிலேயே எல்லா வளங்களையும் உடைய நாடுகள் சிறந்த நாடுகளாகும்.

நாடென்ப,நாடா, நாடல்ல, நாட,நாடு...இதுதான் வள்ளுவர்

No comments: