Thursday, September 12, 2019

சில சிறப்பு குறள்கள் - 58

துணை எழுத்தே வராத குறள்...

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக (391)

பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவிற்குக் கற்றுக் கொள்ள வேண்டும்.கற்ற பிறகு அடஹ்ன்படி நடகக் வேண்டும்

2)நெடில் வராத குறள்

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்
தகநக நட்பது நட்பு (786)

இன்முகம் காட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளம் அல்ல..இதயமார நேசிப்பதே உண்மையான நட்பாகும்

3)
கீழே சொல்லியுள்ள குறளில் பால்,தேன், நீர் மூன்றும் வருகிறது

பாலொடு தேங்கலந் தற்றே பணிமொழி
வாலெயி றுறிய நீர் (1121)

இனியமொழி பேசுகின்ற இவளுடைய வெண்முத்துப் பற்களிடையே சுரந்து வரும் உமிழ்நீர், பாலும் தேனும் கலந்தாற்போல் சுவை தருவதாகும்

4)வெஃகாமை எனுன் அதிகாரத்தில் உ:ள்ள பத்து பாட்ல்களிலுமே வெஃகிற்,வெஃகிப்,வெஃகி,வெஃகுதல்,வெஃகி(அஃகி),வெஃகி,வெஃகி,அஃகாமை, வெஃகாமை,வெஃகா,வெஃகின் என 12 இடங்களில் ஆயுத எழுத்தினை பயன்படுத்தியுள்ளார் வள்ளுவர்


No comments: