Saturday, September 7, 2019

வள்ளுவரின் சொல் விளையாட்டு - 42

புகழ்மிக்க வீர வாழ்க்கையை விரும்புகிறவர், தனக்கு எப்படியும் புகழ் வரவேண்டு மென்பதற்காக மான உணர்வுக்குப் புறம்பான காரியத்தில் ஈடுபடமாட்டார்கள்

சீரினும் சீரல்ல செய்வாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர் (962)

சீரினும்,சீரல்ல, சீரொடு

அடுத்து கொல்கிறார்

குன்றின் அணையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அணைய செயின் (965)

குன்றினைப் போல் உயர்ந்து கம்பீரமாக நிற்பவர்களும் ஒரு குன்றிமணி அளவு இழிவான செயலில் ஈடுபட்டால் தாழ்ந்து குன்றிப் போய் விடுவார்கள்

குன்றின்,குன்றுவர்,குன்றுவ,குன்றி..இது வள்ளுவனின் தமிழ் விளையாட்டு.

இக்குறள்கள் வரும் அதிகாரம் மானம்

No comments: