Tuesday, September 10, 2019

வள்ளுவரும் விலங்குகளும் - 53

வள்ளுவர் கீழ்கண்ட குறள்களில்"மான்" களைகுறிப்பிட்டுள்ளார்.

1)
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின் (969)

உடலில் உள்ள உரோமம் நீக்கப்பட்டால் உயிர் வாழாது கவரிமான் என்பார்கள்.அதுபோல மானம் அழிய நேர்ந்தால் உயர்ந்த மனிதர்கள் உயிரையே விட்டு விடுவார்கள்

2)
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து (1085)

உயிர் பறிக்கும் கூற்றமோ? உறவாடும் விழியோ? மருட்சிகொள்ளும் பெண்மானோ? இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்று கேள்விகளையும் எழுப்புகின்றதே

3)
பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்
கணியெவனோ ஏதில தந்து (1089)

பெண்மானைப் போன்ற இளமைத் துள்ளும் பார்வையையும்,நாணத்தையும் இயற்கையாகவே
 அணிகலன்களாகக் கொண்ட இப்பேரழகிக்குச் செயற்கையான அனிகலன்கள் எதற்காக?

No comments: