Tuesday, September 3, 2019

வள்ளுவரும் சொல்விளையாட்டும் - 29


ஒரு செயலில் ஈடுபட முடிவெடுக்கும் போது அச்செயலால் விளையும் சாதக பாதகங்களை பற்றிய ஆராய்ச்சியும் முடிவடைந்திருக்க வேண்டும்.முடிவெடுத்தப் பின் காலந் தாழ்த்துவது தீதாக முடியும்

வினை செயல்வகையில் மேலும் சொல்கிறார்..

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை (672)

தூங்குக, தூங்கி,தூங்கற்க, தூங்காது....அடடா...

நிதானமாகச் செய்ய வேண்டிய காரியங்களைத் தாமதித்துச் செய்யலாம்.ஆனால் விரைவாகச் செய்ய வேண்டிய காரியங்களில் தாமதம் கூடாது.

இயலும் இடங்களில் எல்லாம் செயல் முடிப்பது நலம் தரும். இயலாத இடமாயின் அதற்கேற்ற வழியை அறிந்து அந்தச் செயலை முடிக்க வேண்டும்

ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல் (673)

ஒல்லும்வாய், ஒல்லாக்கால், செல்லும்வாய்...

No comments: