Monday, September 9, 2019

குவளை மலரும்..தாமரையும் - 51

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு (595)

இக்குறளில் தாமரை என்று தனித்து சொல்லாவிடினும்..தண்ணீரில் மலர்வது தாமரை அல்லவா? ஆகவே இக்குறளில் அவர் தாமரை மலரைத்தான் சொல்லியிருக்கக் கூடும்

தண்ணீரின் அளவுதான் அதில் மலர்ந்துள்ள தாமரைத் தண்டின் அளவும் இருக்கும்.அதுபோல மனிதரின் வாழ்க்கையின் உயர்வு அவர் மனத்தில் கொண்டுள்ள ஊக்கத்தின் அளவே இருக்கும்

2)தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
  தாமரைக் கண்ணான் உலகு (1103)

தாமரைக் கண்ணான் உலகம் என்றெல்லாம் சொல்கிறார்களெ, அது என்ன!  அன்பு நிறைந்த காதலியின் தோளில் சாய்ந்து துயில்வது போல அவ்வளவு இனிமை வாய்ந்ததா?

3)
காணின் குவளை கவிழ்ந்து நிலனோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று (1114)

என் காதலியைக் குவளை மலர்கள் காண முடிந்தால், "இவள் கண்களுக்கு நாம் ஒப்பாக முடியவில்லையே" எனத் தலைக்குனிந்து நிலம் நோக்கும்

மணமில்லா மலரையும் வள்ளுவர் விட்டு வைக்கவில்லை..

இணரூழ்த்து நாறா மலரனையர் கற்ற
துணர விரிந்துரையா தார் (650)

கற்றதைப் பிறர் உணர்ந்து கொள்ளும் வகையில் விளக்கிச் சொல்ல முடியாதவர் கொத்தாக மலர்ந்திருந்தாலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்

No comments: