Thursday, September 5, 2019

வள்ளுவரின் சொல்விளையாட்டு - 33

அவை அஞ்சாமை இது அதிகாரம்

குறள்..

கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார் (722)

கற்றவரின் முன் தாம் கற்றவற்றை அவருடைய மனதில் பதியுமாறு சொல்ல வல்லவர், கற்றவர் எல்லாரினும் மேலானவராக மதித்துச் சொல்லப்படுவார்

கற்றாருள், கற்றார், கற்றார்முன்,கற்ற இது இவருடைய விளையாட்டு

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத் தஞ்சா தவர் (723)

அமர்க்களத்தில் சாவுக்கும் அஞ்சாமல் போரிடுவது பலருக்கும் எளிதான செயல்.அறிவுடையோர் நிறைந்த அவைக்களத்தில் அஞ்சாமல் பேசக்கூடியவர் சிலரே ஆவர்.

பகையகம், அவையகம்
சாவார்,எளியர், அரியர்

No comments: