Monday, September 9, 2019

வள்ளுவரும் சொல் விளையாட்டும் - 49


"இப்பிறவியில் யாம் பிரியமாட்டோம்" என்று சொன்னவுடன், "அப்படியானால்..மறுபிறப்பு என்று ஒன்று உண்டா? அப்போது நம்மிடையே பிரிவு ஏற்படும் என்று சொல்கிறாயா"? எனக் கேட்டு கண் கலங்குவாளாம் காதலி.

யாரினுங் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று (1314)

"யாரைக்காட்டிலும் உன்னிடம் நான் காதல் மிகுதியாகக் கொண்டுள்ளேன்" இன்று இயல்பாகச் சொன்னதைக் கூட காதலி தவறாக எடுத்துக் கொண்டு "யாரைக்காட்டிலும்..யாரைக்காட்டிலும்" எனக்கேட்டு ஊடல் புரியத் தொடங்கி விட்டால்

யாரினும்,யாரினும், யாரினும்....இது வள்ளுவரின் விளையாட்டு

இக்குறள் புலவி நுணுக்கம் எனும் அதிகாரத்தில் வருகிறது.

No comments: