Monday, September 9, 2019

வள்ளுவரும் அனிச்சமலரும் - 50


வள்ளுவர் அனிச்ச மலர் பற்றி நான்கு குறள்களில் சொல்லியுள்ளார்..

அவற்றைப் பார்ப்போம்

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து (90)

அனிச்சம் எனப்படும் பூ, முகர்ந்தவுடன் வாடிவிடக் கூடியது.அதுபோல சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடி விடுவர்

2)நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
 மென்னீரள் யாழ்வீழ் பவள் (1111)


அனிச்ச மலரின் மென்மையைப் புகழ்ந்து பாராட்டுமின்றேன்.ஆனால் அந்த மலரை விட மென்மையானவள் என் காதலி

3)
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை (1115)

அவளுக்காக நல்ல பறை ஒலிக்கவில்லை.ஏனெனில் அவள் இடை ஒடிந்து வீழ்ந்துவிட்டாள்.காரணம் அவள் அனிச்ச மலர்களைக் காம்பு நீக்காமல் தலையில் வைத்துக் கொண்டதுதான்

4)
அனிச்சமும் அன்னத்தின் தூவியு மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம் (1120)

அனிச்ச மலராயினும், அன்னப்பறவை இறகாயினும் இரண்டுமே நெருஞ்சி முள் தைத்தது போல் துன்புறுத்தக் கூடிய அளவிற்கு என் காதலியின் காலடிகள் அவ்வளவு மென்மை வாய்ந்தவை.

(நெருஞ்சிப் பழம் என்கிறார்.அனிச்ச மலர்,அன்னப்பறவை).

No comments: