Tuesday, September 3, 2019

வள்ளுவரும் சொல்விளையாட்டும் - 30

ஒரு செயலில் ஈடுபடுகிறவன் அச் செயல்குறித்து முழுமையாக உணர்ந்தவனின் கருத்தினை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்

செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளங் கொளல் (677)

செய்வினை, செய்வான், செயன்முறை, உள்ளறிவான், உள்ளம்

வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானயாத் தற்று (678)


ஒரு செயலில் ஈடுபடும்போது, அச்செயலின் தொடர்பாக மற்றொரு செயலையும் முடித்துக் கொள்வது ஒரு யானையைப் பயன்படுத்தி மற்றொரு யானையைப் பிடிப்பது போன்றதாகும்

வினையான், வினையாக்கி,யானையால் யானையா

நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல் (679)

நண்பருக்கு நல்லுதவி செய்வதைக் காட்டிலும் பகைவராயிருப்பவரைத் தம்முடன் விரைந்து செய்யத் தக்கதாகும்

நட்டார்க்கு,நல்ல,ஒட்டாரை, ஒட்டி

இக்குறள்கள் எல்லாம் வரும் அதிகாரம் வினைசெயல் வகையாகும்

No comments: