Sunday, September 1, 2019

வள்ளுவரின் சொல் விளையாட்டு - 22

கொடுங்கோன்மை அதிகாரத்திலேயே வரும் மற்ற குறளினையும் பார்ப்போம்..

மழையில்லாவிடில் துன்பமுறும் உலகத்தைப் போல அருள் இல்லாத அரசினால் குடிமக்கள் தொல்லைப்படுவார்கள்.

துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு (557)

நீதிநெறி தவறாத செங்கோன்மைதான் ஒரு அரசுக்கு புகழைத் தரும்.இல்லையேல் அந்த அரசின் புகழ் நிலையற்றுச் சரிந்து போகும்

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னவாம் மன்னர்க் கொளி (556)

மன்னர்க்கு,மன்னுதல்,மன்னவாம், மன்னர்க்கு..இதுதான் வள்ளுவர்.

No comments: