Sunday, June 30, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 66

தன் திறமை என்ன, வலிமை என்ன எனத் தெரியாது, தன்னைத்தானே பிரமாதமாக எண்ணிக்கொண்டு செயல் ஆற்றுபவர்கள் விரைவில் காணாமல் போவார்கள்.

அப்படிப்பட்டவர்கள் எப்படிப்பட்டவர்கள் போலவாம் தெரியுமா?

மரத்தின் நுனிக்கிளையில் அமர்ந்து கொண்டு..அதற்கு மேலும் ஏறிட முயல்பவர் போன்றவர்களாம்

அப்படி முயன்றால் என்ன ஆகும்...கிளை ஒடிந்து கீழே விழுந்து தங்கள் அழிவைத் தேடிக் கொள்ள வேண்டியதுதான்.

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்  (476)

தன்னைப் பற்றி அதிகமாகக் கணக்குப் போட்டுக் கொண்டு, எல்லை மீறிப் போகிற ஒருவர், நுனிக்கிளையில் ஏறியவர் அதற்கு மேலும் ஏறிட முயற்சி செய்தால் என்ன ஆவாரோ..அந்தக் கதிக்கு ஆளாவார்கள்

No comments: