Sunday, June 9, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 41

செல்வம் படைத்த செல்வந்தர்களுக்குக் கிடைக்கும் மரியாதை, சிறப்பு..பொருளில்லா வறியவர்களுக்குக் கிடைப்பதில்லை.

இதில் சில மாற்று கருத்துகள் இருந்தாலும்..நடைமுறையில் இதுதான் உண்மை.

பொருள் இல்லாதவர்க்கு எப்படி சிறப்பில்லையோ அதேபோல ..தன் உடலை  வளர்க்க சற்றும் கருணை உள்ளம் இல்லாமல் பிற உயிரைக் கொன்று உணவாக்கிக் கொள்கிறார்களோ அவர்களுக்கும் சிறப்பு இல்லையாம்.

பொருளாட்சி போற்றாதார்க் கில்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்றின் பவர்க்கு (252)

பொருளைப் பேணிக் காத்திடாதவர்க்குப் பொருள் உடையவர் என்னும் சிறப்பு இல்லை.(அதுபோல) புலால் உண்பவர்க்கும் அருள் உடையவர் என்ற சிறப்பு இல்லை

No comments: