Wednesday, June 19, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 53

நேற்றுவரை உயிருடன் இருந்தவர் இன்று இல்லை என்ற அகந்தையை, தன் பெருமையாகக் கொண்டதாம் இவ்வுலகு.

உடலுடன் தங்கியுள்ள உயிர் அதனைப் பிரிந்தால் அவ்வளவுதான்.

வாழ்க்கை நிலையற்றது.

தினமும் இரவு உறங்கி..பகலில் எழுவது அனைத்து உயிர்களுக்கும் இயற்கை அளித்த வரப்பிரசாதம்.

வள்ளுவன் தினமும் உறங்குவதை...இறப்புக்கும்...துயிலெழுவதை பிறப்புக்கும் ஒப்பிட்டு சொல்கிறார்

உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு  (339)

என்கிறார்.

நிலையற்ற வாழ்க்கையில், உறக்கத்திற்குப் பிறகு விழிப்பதைப் போன்றது பிறப்பு.திரும்ப விழிக்க முடியாத மீளா உறக்கம் கொள்வதே இறப்பு

  

No comments: