Friday, June 21, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 57

அவன் அதிகம் விவரம் அறியாதவன்

ஆனால், எல்லோர் முன்னும் எல்லாம் அறிந்தது போல நடந்து கொள்வான்.

அதைக் கண்ட இளைஞர்கள் சிலர்  சபையில்அவனை பேச அழைத்தனர்.

பேச எழுந்த அவனின் உண்மைத் தோற்றம் சில நொடிகளில் வந்தோர்க்கு புரிந்து விட்டது.

இது போன்ற நிலை எதற்கு ஒப்பாகும் தெரியுமா?

சொக்கட்டான் என்று ஒரு விளையாட்டு.அது பல
கட்டங்கள் போட்டு ஆடும் விளையாட்டு.ஆனால் கட்டங்கள் இன்றி விளையாடும் சொக்கட்டான் விளையாட்டு போன்றதாம்..நாம் நேலே சொன்ன அறிவாற்றல் இல்லாதவன் அவையில் பேசுவது.

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றி கோட்டி கொளல்  (401)

நிறைந்த அறிவாற்றல் இல்லாமல் அவையில் பேசுவது ஆடுவதற்கான கட்டம் போட்டுக் கொள்ளாமலே சொக்கட்டான் விளையாடுவதைப் போன்றதாகும்.  

No comments: