Friday, June 14, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 44

மனம் நிறைய அழுக்கினை வைத்துக் கொண்டு, உத்தம சீலரைப்போல நடந்து கொண்டு மக்களை ஏமாற்றும் வஞ்சகர் பலரை, நாம் நமது அன்றாட வாழ்க்கையில் பார்க்க நேரிடுகிறது.

சாதாரண மக்கள் மட்டுமின்றி, துறவிகள் என்று தம்மை சொல்லிக் கொண்டு, தகாத செயல்களில் ஈடுபடும் போலிகளும் உண்டு.

அப்படிப்பட்டவர்களை வள்ளுவர் யாருடன் ஒப்பிடுகிறார் என்று பாருங்கள்...

தவமறைந் தல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று (274)

என் கிறார்.

புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளைக் கண்ணி வைத்துப் பிடிப்பதற்கும், தவக்கோலத்தில் இருப்பவர்கள் தகாத செயல்களில் ஈடுபடுவதற்கும் வேற்பாடு இல்லை

No comments: