Tuesday, June 25, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 62

பெரும் தீ...அதன் முன்னர் மலைபோல குவிக்கப்பட்டுள்ள வைக்கோல்..

நிலைமை என்னாகும்..

வைக்கோல் முழுதும் கருகி நாசமாகும்.

அதுபோல...என வள்ளுவர் எதைச் சொல்கிறார் எனப் பார்ப்போம்.

மனதில் பேராசை,இழிவான நடத்தை, மாசு படியும் செயல்கள் ஆகியவை உள்ளவனுக்கு எந்நேரமும் அழிவு ஏற்படும்.

ஆகவே..முன்கூட்டியே எச்சரிக்கை உணர்வுடன்..சமுதாயத்தில் நல்லவனாக நடந்திடல் வேண்டும்.இலலாவிடின் அவன் வாழ்வு  தீயின் முன் வைக்கப்பட்ட வைக்கோலாய் அழிந்துவிடும்

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்  (435)

முன்கூட்டியே எச்சரிக்கையாக இருந்து ஒரு தவறான செயலைத் தவிர்த்து கொள்ளாதவருடைய வாழ்க்கையானது நெருப்பின் முன்னால் உள்ள வைக்கோல் போர் போலக் கருகிவிடும்

No comments: