Tuesday, June 11, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 43

ஐம்புலன்களையும் அடக்கி தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்து பற்றற்ற ஒழுக்கசீலர்களே துறவு வாழ்க்கையில் சிறந்தவர்களாக இருக்கமுடியும்.

ஆனால்...இன்று பல இடங்களில் துறவிகள் எனச் சொல்லிக்கோன்டு..சமூக விரோத காரியங்களைச் செய்துக் கொண்டு மக்களை ஏமாற்றும் பல போலித் துறவிகளைப் பார்க்கமுடிகிறது.

இப்படிப்பட்ட துறவிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் எப்பேர்ப்படட்வர்கள் என வள்ளுவர் கூறுவதைக் கேளுங்கள்...

அவர்கள் பசு ஒன்று புலித்தோலைப்  போர்த்திக் கொண்டு மக்களை ஏமாற்றுவது போலவாம்

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந்  தற்று (273)

மனதை அடக்க முடியாதவர் துறவுக்கோலம் பூணுவது, பசு ஒன்று புலித்தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை மேய்வது போன்றதாகும்

No comments: