Saturday, June 8, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 40

தொட்டனைத்தூறும் மணற்கேணி...அதுபோல ஒருவன் கல்வி அறிவு படிக்க படிக்க வளரும்.

அவன் படிக்கும் நூலில் சொல்லப்பட்டிருக்கும் செய்திகளை, உண்மைகளை அவனால் அப்போதுதான் புரிந்து கொள்ள முடியும்

அதுபோலத்தான் அருள் இல்லாதவனின் அவனின் அறச்செயல்களும் புரிந்து கொள்ள முடியாமல் போகுமாம்.

மனதில் அருள் எனும் ஈரம் இருந்தாலே..போதுமாம்

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம் (249)

அறிவுத் தெளிவு இல்லாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டறியமுடியுமா? (முடியாது) அதுபோலத்தான் அருள் இல்லாதவன் செய்யும் அறச்செயல்களும் இருக்கும் 

No comments: