எந்த ஒரு காரியத்தை முடிக்க வேண்டுமானாலும், அதற்கான மன உறுதி வேண்டும்.
ஒருவர் உருவத்தில் சிறியவராய் இருப்பார்கள், ஆனால் மன உறுதி, செயலாற்றல் ஆகியவற்றில் உறுதியாய் இருப்பார்கள்.வாமன அவதாரம் உருவில் சிறியது..ஆனால் தன் கால்களால் உலகை அளந்த அவதாரம்.
ஆகவே, ஒருவரின் உருவ அமைப்பை வைத்து, அவர்கள் திறமையற்றவர்களாக இருப்பார்களோ? என எண்ணக்கூடாது.
அப்படிப்பவர்களை வள்ளுவர் எதனுடன் ஒப்பிடுகிறார் பாருங்கள்..
உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்
கச்சாணி யன்னார் உடைத்து (667)
உருவத்தால் சிறியவர்கள் என்பதற்காக யாரையும் கேலிசெய்து அலட்சியப்படுத்தக் கூடாது. பெரியதேர் ஓடுவதற்குக் காரணமான அச்சாணி உருவத்தால் சிறியதுதான் என்பதை உணர வேண்டும்
2 comments:
அருமை
நன்றி
Post a Comment